எல்நினோவால் மீண்டும் உயிர்க் கொல்லி நோய்கள் ஏற்படும் அபாயம்
By: Nagaraj Sun, 25 June 2023 11:54:21 AM
நியூயார்க்: உயிர் கொல்லி நோய்கள் உருவாகும்... எல் நினோ எனப்படும் காலநிலை மாற்றம் காரணமாக மீண்டும் உயிர்க் கொல்லி நோய்கள் உருவாகும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ராஸ் அதோனாம், எல் நினோ காரணமாக விவசாய சீர்குலைவு மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவை ஏற்படும் என்று குறிப்பிட்டார்.
மேலும் டெங்கு, ஜிகா, சிக்குன்குன்யா போன்ற உயிர்கொல்லி வைரஸ்கள் பரவுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிகரிக்கும் கொசுக்களின் இனப்பெருக்கம் இந்த வைரஸ்கள் வேகமாகப் பரவ வாய்ப்பாக இருக்கும் எனவும், டெங்குவைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பல நோய்களைத் தடுக்க உதவும் என்றும் டெட்ராஸ் அதோனாம் குறிப்பிட்டுள்ளார்.