Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் மின்சார பாதையில் பராமரிப்பு பணி..மின்சார ரெயில் சேவை ரத்து

சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் மின்சார பாதையில் பராமரிப்பு பணி..மின்சார ரெயில் சேவை ரத்து

By: vaithegi Fri, 05 Aug 2022 3:05:33 PM

சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் மின்சார பாதையில் பராமரிப்பு பணி..மின்சார ரெயில் சேவை ரத்து

சென்னை: மின்சார ரெயில் பயணிகளின் பாதுகாப்பை கருதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொறியியல் பணிகள், சிக்னல், வழித்தடம் சரி பார்த்தல் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகின்றன.

அந்தவகையில் சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் மின்சார பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று நடக்கின்றன. இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஒரு பகுதியாகவும் முழுமையாகவும் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

electric train,cancelled ,மின்சார ரெயில் ,ரத்து

மேலும் இன்று இரவு 8.25 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடில் இருந்து வேளச்சேரி புறப்படும் மின்சார ரெயில் கடற்கரை- வேளச்சேரி இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. கும்மிடிப்பூண்டியில் இருந்து வேளச்சேரிக்கு இரவு 8.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கடற்கரை- வேளச்சேரி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதை அடுத்து இரவு 10.50 மணி, இரவு 11.1 மணிக்கு புறப்படும் வேளச்சேரி-கடற்கரை இடையேயான மின்சார ரெயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே சென்னை டிவிசன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags :