Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது

By: vaithegi Tue, 31 Oct 2023 10:25:22 AM

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது


சென்னை : சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான 53 மின்சார ரயில்கள் இன்று ரத்து. காலை முதல் இரவு வரை கூடுதல் ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது.

இதையடுத்து சென்னை எழும்பூர் - தாம்பரம் வழித்தடத்தில் பரங்கிமலை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே காலை 10 மணி முதல் பிற்பகல் 2.45 மணி வரை 36 ரயில்களும்,

electric trains,chennai beach,chengalpattu , மின்சார ரயில்கள் ,சென்னை கடற்கரை , செங்கல்பட்டு

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, திருமால்பூர்-கடற்கரை வழித்தடங்களிலும் ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

மேலும் தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையம் முதல் விமான நிலையம் மெட்ரோ வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியிலும் ஆலந்தூர்-வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் 3 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Tags :