Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தண்டவாள பராமரிப்பு பணி ... இன்று முதல் 4 நாட்களுக்கு மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து

தண்டவாள பராமரிப்பு பணி ... இன்று முதல் 4 நாட்களுக்கு மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து

By: vaithegi Sun, 11 June 2023 2:15:33 PM

தண்டவாள பராமரிப்பு பணி ...  இன்று முதல் 4 நாட்களுக்கு மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சென்னை சென்னை பேசின்பிரிட்ஜ்-வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்கள் இடையே இன்று முதல் 14-ந்தேதி(புதன்கிழமை) வரை 4 நாட்கள் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. எனவே, இந்நாட்களில் சில மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அதன்படி, சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிற்கு இரவு 10.35 மணிக்கு செல்லும் ரயில், ஆவடிக்கு இரவு 11.30 மணிக்கு செல்லும் ரயில்களும், அதேபோன்று பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிலிருந்து சென்டிரலுக்கு இரவு 11.55 மணிக்கு செல்லும் ரயிலும், இன்றும், 13-ந்தேதியும் ரத்து செய்யப்படுகிறது.

electric trains,track maintenance work , மின்சார ரயில்கள் ,தண்டவாள பராமரிப்பு பணி

*சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணத்துக்கு அதிகாலை 1.20 மணிக்கு செல்லும் ரயில், திருவள்ளூரிலிருந்து சென்டிரலுக்கு அதிகாலை 4.45 மணிக்கு புறப்படும் ரயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிலிருந்து சென்டிரலுக்கு அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் ரயில், சென்டிரலிருந்து திருவள்ளூருக்கு அதிகாலை 5.40 மணிக்கு புறப்படும் ரயில்கள் நாளை(திங்கட்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

*ஆவடியிலிருந்து சென்டிரலுக்கு அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் ரெயில், சென்டிரலில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிற்கு அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் ரயில் வரும் 12 மற்றும் 14-ந்தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.*பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து சென்டிரலுக்கு இரவு 10.45 மணிக்கு செல்லும் மின்சார ரயில் இன்றும், 13-ந்தேதியும் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்.

மேலும் *சென்டிரலில் இருந்து திருவள்ளூருக்கு அதிகாலை 3.50 மணிக்கு இயக்கப்படும் ரயில் வரும் 14-ந்தேதி ஆவடியில் இருந்து இயக்கப்படும். *சென்டிரலில் இருந்து திருவள்ளூருக்கு அதிகாலை 4.30 மணிக்கு செல்லும் ரயில் வரும் 12 மற்றும் 14-ந்தேதிகளில் ஆவடியிலிருந்து இயக்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :