Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் .. மின்சார வாரியம் சுற்றறிக்கை

முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் .. மின்சார வாரியம் சுற்றறிக்கை

By: vaithegi Fri, 16 June 2023 10:17:56 AM

முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் ..  மின்சார வாரியம் சுற்றறிக்கை

சென்னை: கடந்த 10-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வருகை புரிந்தார். கடந்த 10 -ம் தேதி இரவு விமான மூலம் அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது விமான நிலையத்தின் வெளியே ஜிஎஸ்டி சாலையில் திடீரென மின் விநியோகம் தடை ஏற்பட்டது. இதை பாஜகவினர் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போரூர் துணை மின் நிலைய உயர் மின் அழுத்த பாதையில் விரிசல் . ஏற்பட்டதன் காரணமாகவே மின் துண்டிப்பு நடந்ததாக மின்சார வாரியம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து மாற்று வழியில் மின்விநியோகம் செய்யப்பட்டது.

electricity board,current ,மின்சார வாரியம்,மின்சாரம்


இந்த நிலையில் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும், மின்சார வாரிய நிர்வாக இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில், முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார் . மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகையின் போது மின் விநியோகம் தடை ஏற்பட்ட நிலையில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

மேலும் அதில் , முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது பிரதான அரசு நிகழ்வுகளின் போதும், மின்வாரிய அதிகாரிகள் நிகழ்வு நடைபெறும் இடங்களை ஆய்வு செய்து மாற்று ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். விஐபி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் மின்வாரிய பொறியாளர்கள், ஊழியர்களும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.



Tags :