Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாநிலம் முழுவதும் பழுதடைந்த மீட்டர்களை உடனடியாக மாற்ற மின்வாரியம் உத்தரவு பிறப்பிப்பு

மாநிலம் முழுவதும் பழுதடைந்த மீட்டர்களை உடனடியாக மாற்ற மின்வாரியம் உத்தரவு பிறப்பிப்பு

By: vaithegi Mon, 17 July 2023 4:53:11 PM

மாநிலம் முழுவதும் பழுதடைந்த மீட்டர்களை உடனடியாக மாற்ற மின்வாரியம் உத்தரவு பிறப்பிப்பு

சென்னை: பழுதடைந்த மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் ... தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழக அரசின் ஆற்றல் துறையின் கீழ் இயங்குகிறது. இன்றைக்கு தமிழகத்தில் மின்வசதி பெறுவோர் எண்ணிக்கை 2 கோடியே 3 இலட்சத்து 87 ஆயிரமாகவும், மின்உற்பத்தி நிறுவு திறன் 10 ஆயிரத்து 214 மெகாவாட் ஆகவும் உள்ளது.

இதையடுத்து மின்வாரியத்திற்கு 1,65,000 கோடி ரூபாய் கடன் இருந்து கொண்டு வருகிறது. எனவே இதனை கட்டுக்குள் வைக்க பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

meters,electricity board ,மின்வாரியம் ,மீட்டர்

இதனை அடுத்து இது பற்றி மின்வாரிய பொறியாளர்களுக்கு, தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, மாநிலம் முழுவதும் பழுதடைந்த மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும்; நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்;
எனவே மாநிலம் முழுவதும் உள்ள பழுதடைந்த மீட்டர்களை மாற்றிய பின், அதுகுறித்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும் என்று அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :
|