Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நகரின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை காரணமாக மின் நுகர்வு குறைவு ... மின்வாரியத்துறை

நகரின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை காரணமாக மின் நுகர்வு குறைவு ... மின்வாரியத்துறை

By: vaithegi Sat, 29 Apr 2023 2:28:42 PM

நகரின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை காரணமாக மின் நுகர்வு குறைவு ...  மின்வாரியத்துறை

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தின் துவக்கத்திலிருந்தே கடுமையான வெயில் தாக்கம் இருந்து வந்தது. இதனால் தமிழகத்தில் மின் நுகர்வு எந்தாண்டும் இல்லாத அளவுக்கு 19 ஆயிரத்துக்கும் அதிகமான மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

மேலும், தமிழகத்தில் மின்சாரத்தின் தேவை அதிகமாக இருந்தாலும் அதை சமாளிப்பதற்கு மின்வாரியத்துறை தயாராகவே இருந்தது.

இதற்கு பின், தமிழகத்தில் மேல் மற்றும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் நிலவும் சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது.

power board,power consumption ,மின்வாரியத்துறை ,மின் நுகர்வு

இதனால். தமிழகத்தில் மின் நுகர்வு தற்போது குறைந்துள்ளதாக மின்வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வருவதால் கிட்டத்தட்ட 1000 மெகாவாட் அளவிற்கு மின் நுகர்வு குறைந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

மேலும், ஏப்ரல் மாதத்தை காட்டிலும் மே மாதத்தில் மின் நுகர்வு இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags :