Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின் நுகர்வு நேற்று புதிய உச்சம், எந்த தடையுமின்றி மின்சாரம் வழங்கப்பட்டது .. அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் நுகர்வு நேற்று புதிய உச்சம், எந்த தடையுமின்றி மின்சாரம் வழங்கப்பட்டது .. அமைச்சர் செந்தில் பாலாஜி

By: vaithegi Thu, 20 Apr 2023 1:53:35 PM

மின் நுகர்வு நேற்று புதிய உச்சம்,  எந்த தடையுமின்றி மின்சாரம் வழங்கப்பட்டது ..  அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.எனவே இதன்காரணமாக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் ஏசி, ஏர்கூலர், குளிர்சாதன பெட்டிகள் ஆகிய பொருட்களின் பயன்பாடும் உயர்ந்துள்ளது.

இதனால் மின் நுகர்வும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு கொண்டு வருகிறது. எனினும் அதிகரிக்கும் மின் தேவையை பூர்த்தி செய்ய மின் வாரியம் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

electricity,minister senthil balaji ,மின்சாரம் ,அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக மின் நுகர்வு 19,087 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் கூறியுள்ளதாவது, “மீண்டும் ஓர் சாதனை. தமிழக வரலாற்றில் முதன்முறையாக, நேற்று 19/04/2023 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 41.82 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. மேலும் இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு 18/04/2023ல், 41.30 கோடி யூனிட்கள் ஆகும். மெகாவாட் அளவில், நேற்று 19/04/2023 மாநிலத்தின் மின் நுகர்வு தேவை 19,087 மெகாவாட் ஆகும். இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச தேவை 18/04/2023ல் 18,882 MW ஆகும்.” என அவர் கூறியுள்ளார்.

Tags :