Advertisement

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை மின் விநியோகம் தடை

By: vaithegi Thu, 08 June 2023 1:19:52 PM

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை மின் விநியோகம் தடை

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை சாக்கோட்டை துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை .... தமிழகத்தில் மாவட்டம் தோறும் அனைத்து துணை நிலையங்களிலும் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டு வருகிறது.

இதையடுத்து இத்தகைய பணிகள் காரணமாக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை ஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சாக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இதன் காரணமாக முக்கிய பணிகளில் மின் தடை செய்யப்படவுள்ளது.

power supply interruption,thanjavur ,மின் விநியோகம் தடை ,தஞ்சாவூர்

அதாவது திருநறையூர் பீடர் வாயிலாக மின் விநியோகம் பெறும் சாக்கோட்டை, கிருஷ்ணாபுரம், அழகாபுத்தூர், கருவிளச்சேரி, திருநறையூர் மற்றும் மேலக்காவேரி பீடர் வாயிலாக மின் வினியோகம் பெறும் பெரும்பாண்டி,

அதைத்தொடர்ந்து காமராஜ்நகர், பழனிச்சாமி நகர் ஆட்டோநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (ஜூன். 09) காலை 9 மணி முதல் 3 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

Tags :