Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென்காசி மாவட்டத்தில் ஜூலை 16ம் தேதி மின் விநியோகம் தடை

தென்காசி மாவட்டத்தில் ஜூலை 16ம் தேதி மின் விநியோகம் தடை

By: vaithegi Thu, 14 July 2022 3:23:45 PM

தென்காசி மாவட்டத்தில் ஜூலை 16ம் தேதி  மின் விநியோகம் தடை

தென்காசி : தமிழகத்தில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் வயர்களை சரி செய்தல், பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு பயனர்களுக்கு பாதுகாப்பான மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் காரணமாக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து வரும் 16ம் தேதி (சனிக்கிழமை) தென்காசி மாவட்டத்தில் உள்ள மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

power supply blackout,tenkasi ,மின் விநியோகம் தடை  ,தென்காசி

அதனால் மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, கலிங்கப்பட்டி, திருவேங்கடம், சத்திரப்பட்டி, உமைய தலைவன் பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், சென்னிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம், ரெங்கசமுத்திரம், ஆலமநாயக்கர்பட்டி,

மேலும் மகாதேவர் பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையார்புரம் மற்றும் குண்டப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Tags :