Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை தேனி மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை

நாளை தேனி மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை

By: vaithegi Fri, 19 May 2023 2:09:04 PM

நாளை தேனி மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை

தேனி : தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் மின் துணை நிலையங்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று பழுது பார்க்கப்படுகிறது. இவ்வாறு, துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு செய்யப்படும் பகுதிகளுக்கு மட்டும் மின் விநியோகம் தடை அறிவிக்கப்படுகிறது.

இதையடுத்து நாளை தேனி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பணிகள் செய்ய இருப்பதால் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது எனவும், பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்குமாறும் மின்வாரியத் துறை சொற்பொழிவாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

power supply interruption,theni , மின் விநியோகம் தடை,தேனி

அதாவது, தேனி கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட், தொழிற்பேட்டை, சிவாஜிநகர், அரப்படித்தேவன்பட்டி, வடபுதுப்பட்டி ஆகிய பகுதிகளிலும்

இதனை அடுத்து பாரஸ்ரோடு, பி.அணைக்கரைப்பட்டி, பி.மீனாட்சிபுரம், குரங்கனி, போடி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4:00 மணி வரைக்கும் மின் விநியோகம் தடை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :