Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை மறுநாள் இந்த மாவட்டத்தில் மின் விநியோகம் நிறுத்தம்

நாளை மறுநாள் இந்த மாவட்டத்தில் மின் விநியோகம் நிறுத்தம்

By: vaithegi Sat, 01 Oct 2022 12:04:55 PM

நாளை மறுநாள் இந்த மாவட்டத்தில் மின் விநியோகம் நிறுத்தம்

சென்னை: தமிழகத்தில் மின் விபத்துகளை தவிர்க்கும் நோக்கிலும், பாதுகாப்பான தடையில்லா மின்சாரத்தை வழங்கவும் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. பராமரிப்பு பணிகளின் போது சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றப்படுகிறது.

மேலும் உறுதியான வயர்கள், மின் கம்பிகள் பொருத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த வகையில் அக்டோபர் 03-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

power outage,chennai ,மின் விநியோகம் நிறுத்தம் ,சென்னை

அந்த துணை மின் நிலையத்தில் புதிய விவசாய மின் இணைப்பு வழங்குவதற்கு மேல ஈரால் உயரழுத்த மின் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளது . அதை தொடர்ந்து வென்றான் துணை மின் நிலையத்திலும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

அதனால் வாலம்பட்டி ,ஆத்தி கிணறு, மேல ஈரால், டி.சண்முகபுரம் ஆகிய பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Tags :