Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருநெல்வேலியில் வருகிற அக்டோபர் 11ம் தேதி அன்று மின் விநியோகம் நிறுத்தம்

திருநெல்வேலியில் வருகிற அக்டோபர் 11ம் தேதி அன்று மின் விநியோகம் நிறுத்தம்

By: vaithegi Sat, 08 Oct 2022 12:26:24 PM

திருநெல்வேலியில் வருகிற அக்டோபர் 11ம் தேதி அன்று மின் விநியோகம் நிறுத்தம்

திருநெல்வேலி: மின் விநியோகம் நிறுத்தம் ... வருகிற அக்டோபர் 11ம் தேதி அன்று யில் மானூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.

மேலும் இது தொடர்பாக திருநெல்வேலி கிராமப்புற செயற்பொறியாளர் தெரிவித்துள்ளதாவது, மானூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற அக்டோபர் 11ம் தேதி அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவித்துள்ளார்.

இதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

power supply outage,tirunelveli ,மின் விநியோகம் நிறுத்தம்,திருநெல்வேலி

இதனை தொடர்ந்து மானூர் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான களக்குடி, எட்டாங்குளம், மானூர், மாவடி, தெற்குப்பட்டி, குறிச்சிகுளம், கானாா்பட்டி, பிள்ளையாா்குளம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும்

மேலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வருகிற அக்டோபர் 11ம் தேதி அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறு மின்வாரிய செயற்பொறியியாளர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags :