சென்னையில் நாளை (ஆகஸ்ட் 1) மின் விநியோகம் தடை
By: vaithegi Sun, 31 July 2022 12:51:20 PM
சென்னை: தமிழகத்தில் இருக்கும் துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இப்பணிகளை செய்யும் போது ஊழியர்களுக்கும், மக்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மின்விநியோகத்தை தடை செய்து பணியை தொடருவார்கள்.
அதனால் அதன்படி நாளை திங்கட்கிழமை சென்னை தாம்பரம் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் அங்குள்ள சில பகுதிகளுக்கு மின் விநியோகம் தடையாகும் என சென்னை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த செய்திக்குறிப்பில் நாளை ஆகஸ்ட் 1ல் தாம்பரம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் நடைபெறவிருக்கும் பராமரிப்பு பணி காரணமாக சிட்லப்பாக்கம் முதல் மெயின் ரோடு, சுப்பிரமணியன் தெரு.
மேலும் ராமசந்திரா சாலை, பத்பநாபன் தெரு, ஐய்யாசாமி தெரு, ஜோதி நகர் 3-வது தெரு ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும் எனவும் பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததும் மின் வினியோகம் மீண்டும் கொடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.