Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (ஜூலை 30) மின் விநியோகம் தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (ஜூலை 30) மின் விநியோகம் தடை

By: vaithegi Fri, 29 July 2022 7:48:21 PM

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (ஜூலை 30) மின் விநியோகம் தடை

கன்னியாகுமரி : உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் மின்சாரம் ஒரு முக்கிய அத்தியாவசிய தேவையாக ஆகிவிட்டது. ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு மூலம் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது.

அப்பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்படும். மேலும், முன்னதாகவே எந்தெந்த பகுதிகளுக்கு மின்தடை செய்யப்படும் என்ற தகவலையும் மின்வாரியம் வெளியிடும்.

kanyakumari,power supply cut off ,கன்னியாகுமரி ,மின் விநியோகம் தடை

அதன்படி நாளை மின்தடை ஏற்படவுள்ள பகுதி குறித்த தகவலை கன்னியாகுமரி மாவட்ட குழித்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அவ்ர்கள் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின் நிலைய பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் குன்னுவிளை, சானல்கரை, சாஸ்தான்குளம், கோட்டை குளம், மணிவிளை, வட்டியூர் கோணம், கட்டச்சல், வைகுண்டம், நெட்டா உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை சனிக்கிழமை (ஜூலை 30) அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :