Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை பகுதிகளில் செப்டம்பர் 13ம் தேதியான நாளை மின் விநியோகம் நிறுத்தம்

ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை பகுதிகளில் செப்டம்பர் 13ம் தேதியான நாளை மின் விநியோகம் நிறுத்தம்

By: vaithegi Mon, 12 Sept 2022 4:12:49 PM

ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை பகுதிகளில் செப்டம்பர் 13ம் தேதியான நாளை மின் விநியோகம் நிறுத்தம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை பகுதிகளில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை செப்டம்பர் 13ம் தேதி மின் விநியோகம்தடை செய்யப்பட இருப்பதாக தமிழ்நாடு மின்பகிர்மானம் மற்றும் உற்பத்திக் கழக ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் ஆர்.பாலமுருகன் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, செப்டம்பர் 13ம் தேதி செவ்வாய்க்கிழமை பட்டிணம் காத்தான் துணைமின் நிலையத்தில் ஓம்சக்தி நகர் உயர்மின் பாதையில் மற்றும் கீழக்கரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பணிகள் நடக்க உள்ளது. இதனால் பராமரிப்பு பணிகள் நடக்கும், சேதுபதி நகர், ஓம்சக்தி நகர் ஆகிய பகுதிகளும்

power supply outage,ramanathapuram ,மின் விநியோகம் நிறுத்தம் ,ராமநாதபுரம்

மேலும் ஆல்வின் பகுதிகள், வசந்த நகர், வெளிப்பட்டிணம், செட்டித்தெரு, தாயுமானவசுவாமி கோயில் தெரு, இந்திராநகர், சிவன் கோயில் தெரு, ரோஸ் நகர், கான்சாகிப் தெரு, டிடி விநாயகா பள்ளித் தெரு, வைகை நகர், அம்மா பூங்கா, ராஜ பள்ளி விளையாட்டு மைதானப் பகுதி, தங்கப்பாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

இதேபோன்று கீழக்கரையை சேர்ந்த பாளையரேந்தல், குளபதம், களரி, வேளானூர், வெள்ளா, ஏக்ககுடி, நல்லாங்குடி, திருஉத்திரகோசமங்கை, காஞ்சிரங்குடி, கோரைக்கூட்டம், கல்லகுளம், செங்கல்நீரோடை, கீழக்கரை நகர், கீழக்கரை 500 பிளாட் பகுதி, மேலத்தெரு, வள்ளல் சாலை, வடக்குத் தெரு, சின்னக்கடை தெரு, சாலை தெரு, சங்கு வெட்டி தெரு, சின்னமாயாகுளம், மாவிலா தோப்பு, கும்பிடுமதுரை, பாரதி நகர், முள்ளுவாடி, சதக் பொறியியல் கல்லூரிகள், ஆழ்வார்க் கூட்டம், விவேகானந்தபுரம் ஆகிய பகுதிகளிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நாளை மின்விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :