Advertisement

நாளை தமிழகத்தில் சில இடங்களில் மின் விநியோகம் தடை

By: vaithegi Tue, 01 Nov 2022 2:12:59 PM

நாளை தமிழகத்தில் சில இடங்களில் மின் விநியோகம் தடை

சென்னை: நவம்பர் 2ம் தேதியாகிய நாளை தமிழகத்தில் சில இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ள காரணத்தால் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட மணி நேரங்கள் மட்டுமே மின் விநியோகம் தடை செய்யப்படும் எனவும்,பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர், மின் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி: திருச்சி மாவட்டம் அம்மாபேட்டை துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட தாயனுார்சந்தை, கல்குடி, எண்ணம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், வெள்ளிவடை, அம்மாபேட்டை, கரியம்பட்டி, மறவாணு சமுத்திரம், சத்திரப்பட்டி, ராம்ஜி என்ஜிஆர், சமத்துவபுரம் பகுதிகள்.

power supply,maintenance work ,மின் விநியோகம்,பராமரிப்பு பணி

மதுரை: மதுரை மாவட்டம் மகாத்மா காந்தி நகர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட குலமங்களம், சொக்கிகுளம், எம்.ஜி.நகர், விஸ்வநாதபுரம், சி.இ.ஓ.ஏ பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர்.
திருநின்றவூர்:

திருநின்றவூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (02.11.2022) மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :