Advertisement

நாளை மறுநாள் இந்த மாவட்டத்தில் மின் விநியோகம் தடை

By: vaithegi Mon, 10 Oct 2022 2:58:08 PM

நாளை மறுநாள் இந்த மாவட்டத்தில் மின் விநியோகம் தடை

திண்டுக்கல் : தமிழகத்தில் பராமரிப்பு பணிகளின் போது சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றபடுகிறது. மேலும் உறுதியான வயர்கள், மின் கம்பிகள் பொருத்தப்பட்டு வருகிறது. இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும், மின் பயனர்களின் பாதுகாப்பிற்காகவும் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து இது குறித்து அந்த பகுதி செயற்பொறியாளர்கள் மூலம் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பும் செய்யப்படுகிறது. அந்த வகையில் அக்டோபர் 12ம் தேதி திண்டுக்கல் மாவட்ட துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

power supply interruption,dindigul ,மின் விநியோகம் தடை,திண்டுக்கல்

அதனால் வாழைக்காய் பட்டி, பென்னகரம், நல்லாம்பட்டி, தோமையார்புரம் ரெட்டியபட்டி, உத்தனம்பட்டி, சிறுமலை அடிவாரம், என்.ஜி.ஓ.காலனி, நரசிங்கபுரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி.காலனி ஆகிய பகுதிகளும்

மேலும் அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, காப்பிளியபட்டி, பாரதிபுரம், ரயில் நிலையம்,நாகல்புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :