Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பூர் நகரில் முக்கிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் தடை

திருப்பூர் நகரில் முக்கிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் தடை

By: vaithegi Fri, 16 June 2023 7:34:56 PM

திருப்பூர் நகரில் முக்கிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் தடை

திருப்பூர் : மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , “திருப்பூர் மாநகரில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முக்கிய பகுதிகளில் மின் சாரம் இருக்காது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

இதையடுத்து மின்தடை ஏற்படும் பகுதிகள்குமார் நகர் துணை மின் நிலையம் : ராமமூர்த்தி நகர், பி.என்.ரோடு. ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி நகர், கொங்கு நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு. வ.ஊ.சி. நகர், டி.எஸ்.ஆர் லே அவுட், முத்து நகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆர்.கே புரம். வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலை நகர் சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ் நகர், புதிய பஸ் நிலையம் மற்றும் லட்சுமி நகர்.

Tags :