Advertisement

வருகிற 27-ந் தேதி இந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்

By: vaithegi Sat, 24 Dec 2022 6:30:23 PM

வருகிற 27-ந் தேதி இந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்

வேலூர்: தமிழகத்தில் அரசு அறிவித்துள்ள படி, துணை மின் நிலையங்களில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எனவே இதன்காரணமாக, டிசம்பர் 27ம் தேதி முக்கிய நகரங்களின் துணை மின் நிலையங்களில் மின்தடை செய்யப்பட உள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்படும்.

அதன்படி சத்துவாச்சாரி, தொரப்பாடியில் 27-ந் தேதி மின்சாரம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மின்பகிர்மான வட்டம் சத்துவாச்சாரி மற்றும் தொரப்பாடி துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் வருகிற 27-ந் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது.

electricity,vellore ,மின்சாரம் ,வேலூர்

எனவே அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சத்துவாச்சாரி பகுதி 1 முதல் 5 வரை, அன்புநகர், ஸ்ரீராம்நகர், டபுள்ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேலுமங்காபுரம், சைதாப்பேட்டை, எல்.ஐ.சி.காலனி, காகிதப்பட்டறை, கலெக்டர் அலுவலகம், ஆவின், கோர்ட்டு, இ.பி.நகர், ஆர்.டி.ஓ.சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், சித்தேரி, தென்றல்நகர்,

இதனை அடுத்து இடையன்சாத்து, பென்னாத்தூர், காட்டுப்புத்தூர், ஆவரம்பாளையம், அரியூர், தொரப்பாடி, ஜெயில் குடியிருப்பு, எழில்நகர், அல்லாபுரம், ஓட்டேரி, சாமிநகர், கன்னிகாபுரம், பள்ளஇடையம்பட்டி, முருகன்நகர், பாகாயம், சஞ்சீவிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது,.

Tags :