ஜனாதிபதி வருகையால் யானைகள் முகாம் 6 நாட்கள் மூடல்
By: Nagaraj Mon, 31 July 2023 8:11:33 PM
நீலகிரி: ஜனாதிபதி வருகை எதிரொலியாக முதுமலை யானைகள் முகாம் இன்று முதல் 6 நாட்கள் மூடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு முகாமில் யானைகளை பராமரித்து வரும் பாகன் தம்பதியர் பொம்மன், பெல்லியை நேரில் சந்திக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 5ம் தேதி முதுமலை வருகிறார்.
அங்குள்ள பாகன் தம்பதிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதோடு, அங்குள்ள பழங்குடியினர் மற்றும் பாகன்களை சந்தித்து பேச உள்ளார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு முதுமலை தெப்பக்காடு முகாம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இன்று முதல் 5ம் தேதி வரை 6 நாட்களுக்கு முகாம் மூடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் வருகையையொட்டி தெப்பக்காடு யானைகள் முகாம் இன்று முதல் வரும் 5ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். யானைகள் முகாமுக்குள் சுற்றுலா பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படவில்லை. சுற்றுலா பயணிகள் மற்ற இடங்களுக்கு செல்லலாம் என்றனர்.