Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து தேசிய புலனாய்வு முகமைக்கு வந்த இமெயில்

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து தேசிய புலனாய்வு முகமைக்கு வந்த இமெயில்

By: Nagaraj Mon, 09 Oct 2023 07:15:52 AM

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து தேசிய புலனாய்வு முகமைக்கு வந்த இமெயில்

புதுடில்லி: கொலை மிரட்டல் விடுத்து வந்த இ-மெயில்... பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து தேசியப் புலனாய்வு முகமைக்கு இமெயில் அனுப்பப்பட்டுள்ளது.

500 கோடி ரூபாய் தரவேண்டும், போதைப் பொருள் தொடர்பான குற்றங்களில் சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோயை விடுதலை செய்ய வேண்டும் என அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

alert,security,officials,pm modi,world cup ,எச்சரிக்கை, பாதுகாப்பு, அதிகாரிகள், பிரதமர் மோடி, உலகக் கோப்பை

இமெயில் மிரட்டலையடுத்து பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், மும்பை போலீசார் மற்றும் குஜராத் போலீசார் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags :
|