Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்; முதலமைச்சர் தகவல்

மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்; முதலமைச்சர் தகவல்

By: Monisha Thu, 30 July 2020 1:00:16 PM

மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்; முதலமைச்சர் தகவல்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகிற 31-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையிலும் கொரோனா நிலவரம் குறித்தும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கொரோனா இறப்பு விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குறைவு. நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க அனைவருக்கும் தமிழக அரசின் மூலம் இலவச முக கவசம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் அதிக பரிசோதனை கூடங்கள் உள்ள ஒரே மாநிலம் தமிழகம் தான்.

medical specialists,counseling,significance,chief minister,curfew ,மருத்துவ நிபுணர்கள்,ஆலோசனை,முக்கியத்துவம்,முதலமைச்சர்,ஊரடங்கு

இந்தியாவிலேயே 25 லட்சத்து 36 ஆயிரத்து 660 பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசின் நடவடிக்கையால் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது. நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று பரவல் குறைக்கப்பட்டது.

ஒவ்வொரு வீட்டிற்கும் 10-க்கும் மேற்பட்ட முறை நேரில் சென்று காய்ச்சல் இருக்கிறதா என சுகாதாரத்துறையினர் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பிறமாவட்டங்களிலும் தற்போது தொற்று குறைந்து வருகிறது. மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :