Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊழியர்கள் போராட்டம்! 10ஆம் தேதிக்குள் பென்ஷன் வேண்டும்..

ஊழியர்கள் போராட்டம்! 10ஆம் தேதிக்குள் பென்ஷன் வேண்டும்..

By: Monisha Wed, 06 July 2022 9:49:52 PM

ஊழியர்கள் போராட்டம்! 10ஆம் தேதிக்குள் பென்ஷன் வேண்டும்..

தமிழ்நாடு: ராமநாதபுரத்தில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய செயல்பாட்டை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முறைசாரா சங்க மாவட்ட செயலாளர் முத்துவின், சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் சுடலைக்காசி, கைத்தறி சங்க மாவட்ட செயலாளர் முரளி, தையல் சங்க மாவட்ட செயலாளர் ஞானசேகர், கட்டுமான சங்க மாவட்ட தலைவர் வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் நலவாரிய ஆன்லைன் பதிவை எளிமைப்படுத்த வேண்டும், புதிய பதிவுகளுக்கு சரிபார்ப்பு கால தாமதம் இன்றி ஒப்புதல் வழங்க வேண்டும். கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 10ஆம் தேதிக்குள் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய நல வாரிய அட்டைகளை தொழிலாளர்களிடம் உரிய முறையில் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

struggle,pension,date,online , பென்ஷன்,ஊழியர்,போராட்டம்,ஆன்லைன் ,

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சந்தானம் தலைமை தாங்கினார். இதில், கைத்தறி சங்க மாவட்ட தலைவர் மோதிலால், முறைசாரா சங்க மாவட்ட பொருளாளர் நாகராஜ், ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளர் ரமேஷ், தையல் சங்க மாவட்ட பொருளாளர் விஜயலட்சுமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், சுமைப்பணி சங்க மாவட்ட தலைவர் பூமிநாதன் நன்றி கூறினார்.

Tags :
|