Advertisement

நாகர்கோவிலில் (ஜூலை 17) வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Sat, 16 July 2022 2:43:49 PM

நாகர்கோவிலில்  (ஜூலை 17) வேலைவாய்ப்பு முகாம்

நாகர்கோவில் : தமிழகத்தில் பல இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலமாக பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நாளை நாகர்கோவிலில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் டதி(DUTHIE) மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இம்முகாம் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்காக நடத்தப்படுகிறது. இம்முகாமில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.

இதை தொடர்ந்து B.ed, M.ed, M Phil உள்ளிட்ட படிப்பை முடித்தவர்களுக்கு கலந்து கொள்ளலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்முகாமில் கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.

employment camp,nagercoil ,வேலைவாய்ப்பு முகாம்,நாகர்கோவில்

இதோடு இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புவர்கள் www.tnschoolteachers.com என்ற இணையதளத்திற்கு சென்று முன்பதிவு செய்ய வேண்டியது அவசியமானதாகும். இதை பதிவு செய்ய இயலாதவர்கள் நேரில் வந்து பதிவு செய்தும் கலந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தவறான தகவல்களை பதிவு செய்பவர்களின் விண்ணப்பம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் முன்பதிவு செய்ய தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இம்முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் தங்களின் அசல் சான்றிதழ்கள் அல்லது நகல் சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்டவை கொண்டு வர வேண்டும். இதையடுத்து இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :