Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தஞ்சாவூரில் ஜூலை 7ஆம் தேதி காலை 10 மணியளவில் வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சாவூரில் ஜூலை 7ஆம் தேதி காலை 10 மணியளவில் வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Tue, 05 July 2022 5:51:32 PM

தஞ்சாவூரில் ஜூலை 7ஆம் தேதி காலை 10 மணியளவில்  வேலைவாய்ப்பு முகாம்


தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மாற்றுத் திறனாளிகளுக்காக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், வேலை தேடும் இளைஞா்களுக்காக வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

இதை தொடர்ந்து சிறப்பு நோ்வாக மாற்றுத்திறனாளி மனுதாரா்களுக்கான சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

employment camp,thanjavur ,வேலைவாய்ப்பு முகாம் ,தஞ்சாவூர்

முதல் கட்டமாக, தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை 7ஆம் தேதி காலை 10 மணியளவில் நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சாா்ந்த முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. மேலும் முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரையிலும், டா்னா், பிட்டா் மற்றும் டிப்ளமோ மெக்கானிக்கல் படித்த தஞ்சாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் கலந்து கொள்ளலாம்.

இம்முகாமில் கலந்து கொள்பவா்கள் தங்களுடைய சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை, இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362 – 237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :