Advertisement

திருவாரூரில் நாளை மறுநாள் வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Fri, 16 Dec 2022 7:57:22 PM

திருவாரூரில் நாளை மறுநாள் வேலைவாய்ப்பு முகாம்

திருவாரூர் : தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பை அளிக்க தமிழக அரசு தீவிரமாக முயற்சித்து கொண்டு வருகிறது. அரசு துறைகளில் உள்ள பணிகளுக்காக தனியாக வேலைவாய்ப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதையடுத்து அதேநேரத்தில் நம்பகத்தன்மை வாய்ந்த தனியார் நிறுவனத்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு உதவும் பொருட்டு தனியார்நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை மாவட்ட நிர்வாகம் வாயிலாக நடத்தி கொண்டு வருகிறது.

employment camp,tiruvarur ,வேலைவாய்ப்பு முகாம் ,திருவாரூர்

அந்த வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார். எனவே அதன்படி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் விர்ச்சு தொண்டு நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாமை டிசம்பர் 18ம் தேதியான நாளை மறுநாள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரியில் நடத்துகிறது.

இதனை அடுத்து இம்முகாமில் தொழிற்பயிற்சி மற்றும் கடனுதவி போன்ற பல வாய்ப்புகள் அளிக்கப்பட உள்ளது. 18 வயது முதல் 35 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :