இந்த மாவட்டத்தில் அக்.22- ல் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்
By: vaithegi Wed, 19 Oct 2022 6:29:33 PM
கள்ளக்குறிச்சி: வேலைவாய்ப்பு முகாம் ..... கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் அதை தொடர்ந்து இந்தியாவின் முன்னணி டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளனர்.
இதையடுத்து இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார்.அதில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் நடத்தும் வேலைவாய்ப்பு முகமானது வரும் சனிக்கிழமை (அக்.22) அன்று கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதைத்தொடர்ந்து இதில் 2020-2021 மற்றும் 2022-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார். இவர்களுக்கு வயது வரம்பு 18 லிருந்து 20 வயதிற்குள் இருக்க வேண்டும். இம்முகாமில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.16,557 ஊதியம் வழங்கப்படும்.
மேலும் அத்துடன் உணவு, தங்குமிடம், 12 நாட்கள் பயிற்சி, போக்குவரத்து, மேற்கொண்டு கல்வி பயில வாய்ப்புகளும் நிறுவனத்தால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடிந்த பிறகு பணி நிரந்தரமும் செய்யப்படும் ஏன் தெரிவிக்கப்பட்டுள்ளது.