Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செப்.18ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

செப்.18ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Wed, 14 Sept 2022 4:08:40 PM

செப்.18ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

கன்னியாகுமரி : தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொண்டு வருகிறது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் செப்டம்பர் மாதம் 18ம் தேதி ஆசிரியர்களை தேர்வு செய்யும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதை அடுத்து இதில் தனியார் பள்ளிகள் நேரடியாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் முதுகலை, இளங்கலை பட்டம் பெற்றவர்கள் மற்றும் BEd ,MEd, Mphil கல்வித் தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம்.

kanyakumari,employment camp ,கன்னியாகுமரி ,வேலைவாய்ப்பு முகாம்


மேலும் கல்வியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களின் உண்மை சான்றிதழ்கள் மற்றும் நகல்களை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

இதை தொடர்ந்து இந்த வேலைவாய்ப்பு முகாமானது செப்டம்பர் 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறும். இதில் கலந்து கொள்ள வருபவர்கள் நேர்முக தேர்வின் போது DEMO CLASS எடுக்க தயாராக வர வேண்டும். மேலும் முகாமில் பங்கேற்பவர்களில் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதனால் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க உள்ளவர்கள் www.tnschoolteachers.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags :