டிசம்பர் மாதம் 14, 15, 16 ஆகிய தேதிகளில் இந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்
By: vaithegi Tue, 29 Nov 2022 7:01:27 PM
சென்னை: தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதையடுத்து சென்னை கோட்டை ரெயில் நிலையத்தின் அருகே உள்ள ராணுவ கலையரங்கத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் டிசம்பர் மாதம் 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளதாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் அதில் 35 முதல் 55 வயது வரை உள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் கல்வி படிப்பை முடிப்பவர்கள் மற்றும் இளங்கலை, முதுகலை பட்டதாரிகளில் 22 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இது பற்றி கூடுதல் விவரங்களுக்கு [email protected] என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இம்முகாமில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.