Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருகிற 23, 25ம் தேதிகளில் இந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

வருகிற 23, 25ம் தேதிகளில் இந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Tue, 21 Mar 2023 3:30:06 PM

வருகிற 23, 25ம் தேதிகளில் இந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்


சென்னை: தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் வகையில், பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பல்வேறு இடங்களில் தனியார் நிறுவனங்கள் மூலமாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம், திருக்குவளையில் முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து வேலைவாய்ப்பு முகாமை நடத்த இருப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து இந்த அறிவிப்பில், முதலாவதாக, நாளை மறுநாள் வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இதே போன்று, வருகிற 25-ம் தேதி அன்று திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலர் அரசினர் மேல்நிலைப் பள்ளியிலும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்தமுகாம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

employment camp,nagapattinam ,வேலைவாய்ப்பு முகாம்,நாகப்பட்டினம்

இந்த முகாமில் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் என இருபாலரும் கலந்து கொள்ளலாம். மேலும் அத்துடன் இம்முகாமிற்கு வருகை புரிபவர்கள் தங்களின் ஆதார் அட்டை நகல், சுய விவரக்குறிப்பு, கல்விச் சான்றிதழ் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும்.

மேலும் கொரோனா மற்றும் இன்புளூன்ஸா காய்ச்சல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :