Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருகிற மே 12 -ம் தேதி இந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

வருகிற மே 12 -ம் தேதி இந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Wed, 10 May 2023 3:26:55 PM

வருகிற மே 12 -ம் தேதி இந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி: வரும் மே 12ம் தேதி தூத்துக்குடியில் உள்ள கோரம்பாளையத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் ...... தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலையற்ற இளைஞர்களுக்காக மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் சார்பாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடியில் கோரம்பாளையத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகிற வெள்ளிக்கிழமை தனியார் வேலை வாய்ப்பு நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

employment camp,thoothukudi ,வேலைவாய்ப்பு முகாம்,தூத்துக்குடி

அதாவது, வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு நடைபெற இருக்கும் இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் எக்கச்சக்கமான தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,10-ம் வகுப்பு தேர்ச்சி, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ என அனைத்து வேலையற்ற இளைஞர்களும் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றிதலுடன் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் நேரில் சென்று கலந்து கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் தற்போது அறிவித்து உள்ளார். மேலும், இந்த வேலை வாய்ப்பு முகாம் தொடர்பான விவரங்களுக்கு 0461-2340159 என்கிற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :