Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாவட்டத்தில் வேலை வாய்ப்பை அளிக்கும் நோக்குடன் வரும் 15ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

இந்த மாவட்டத்தில் வேலை வாய்ப்பை அளிக்கும் நோக்குடன் வரும் 15ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Wed, 09 Nov 2022 2:02:21 PM

இந்த மாவட்டத்தில் வேலை வாய்ப்பை அளிக்கும் நோக்குடன் வரும் 15ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

மதுரை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி அதில் திறமையானவர்களை தேர்வு செய்து பணி ஆணைகளை வழங்கி கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மதுரையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளது.

இதையடுத்து இந்த முகாமில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 20 வயதிற்குள் உள்ள பெண்கள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1000க்கும் மேற்பட்ட நபர்களை இந்த நிறுவனம் தேர்வு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

employment,madurai ,வேலைவாய்ப்பு ,மதுரை

முகாமானது வரும் 15ம் தேதி கே. புதூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது.இம்முகாமின் மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சியுடன் மாதம் ரூ. 15,000 ஊதியமாக வழங்கப்படும்.

மேலும் அத்துடன் உணவு, தங்கும் இடம், போக்குவரத்து வசதி போன்றவை இலவசமாக அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க வருபவர்கள் தங்களின் அசல் கல்வி தகுதி சான்றிதழ்களை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :