Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விழுப்புரம் மாவட்டத்தில் வரும் மே 19 ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் வரும் மே 19 ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Tue, 16 May 2023 1:30:26 PM

விழுப்புரம் மாவட்டத்தில் வரும் மே 19 ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம் : தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு கொண்டு வருகிறது.

இந்நிலையில், வரும் மே 19ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்து உள்ளார்.

employment camp,villupuram ,வேலைவாய்ப்பு முகாம்,விழுப்புரம்

மேலும், 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து பட்டப்படிப்பு, டிப்ளமோ படித்தவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த வேலை வாய்ப்பு முகாமின் மூலமாக 500க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாகவும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி அவகர்லா அறிவித்துள்ளார். இதையடுத்து, இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை என்று அனைத்து முக்கிய ஆவணங்களுடன் நேரில் சென்று கலந்து கொள்ளும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :