Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 2ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்கள் பயன்பெற அழைப்பு

வரும் 2ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்கள் பயன்பெற அழைப்பு

By: Nagaraj Sat, 25 Nov 2023 7:06:30 PM

வரும் 2ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்கள் பயன்பெற அழைப்பு

திருநெல்வேலி: வரும் டிசம்பர் 2 ஆம் தேதி திருநெல்வேலியில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

employment,camp,tirunelveli . youth camp ,,வேலைவாய்ப்பு, இளைஞர்கள், முகாம், திருநெல்வேலி

அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து இம்முகாமில் 5-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்கள் வரையிலும் இந்த முகாமில் கலந்துகொண்டு தங்களுக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், விருப்பம் உள்ளவர்கள் தங்களின் சுயவிபரம், கல்வி சான்று , ஆதார் அட்டை ஆகிய முக்கிய ஆவணங்களுடன் வேலைவாய்ப்பு முகாமில் நேரில் சென்று கலந்து கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|