- வீடு›
- செய்திகள்›
- விருதுநகரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் ஜனவரி 28-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
விருதுநகரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் ஜனவரி 28-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
By: vaithegi Thu, 26 Jan 2023 7:21:40 PM
விருதுநகர் : வருகிற 28-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் ..... தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் ஒவ்வொரு வாரமும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. வேலை வழங்குபவர்களுக்கும், வேலை தேடுவோருக்கும் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்துவதே இம்முகாமின் நோக்கமாகும்.
இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே. கல்லூரியில் வருகிற ஜனவரி 28-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
இதனை அடுத்து அதில் 100-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றன. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.
மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள வேலை வாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களுடன் 28 ஆம் தேதி காலை நேரடியாக வர வேண்டும். அது மட்டுமில்லாமல் முகாமில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.