Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பூர் மாவட்டத்தில் வரும் ஜூலை 2ம் தேதியன்று வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் வரும் ஜூலை 2ம் தேதியன்று வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Mon, 27 June 2022 6:23:59 PM

திருப்பூர் மாவட்டத்தில் வரும் ஜூலை 2ம் தேதியன்று வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூர் : பல்வேறு தனியார் துறைகளில் காலியாக இருக்கும் பதவிகளுக்கு இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் ஆட்சேர்ப்புகளை செய்யும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

இதற்காக மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் வரும் ஜூலை மாதம் 2ம் தேதியன்று திருப்பூர் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் வரும் ஜூலை 2ம் தேதி அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக அம்மாவட்ட ஆட்சியர் வினித் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

 ,வேலைவாய்ப்பு முகாம்,ஆட்சேர்ப்பு

அதன்படி, ‘திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம், மகளிர் திட்ட அலுவலகம் சார்பில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் வரும் ஜூலை 2ம் தேதி அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்சேர்ப்பு செய்ய இருக்கின்றது.

அதனால் 10 மற்றும் 12ம் வகுப்பு படித்த மாணவர்கள், பொறியியல், கலை அல்லது அறிவியல் பட்டதாரிகள் கணினி பயின்றவர்கள், ஓட்டுநர்கள், தையல் உள்ளிட்ட தொழிற்கல்வி அறிந்தவர்கள் என அனைவரும் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் முதலில் அதற்கான இணையதளத்தில் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்த கூடுதல் தகவல்களை 0421-299152 அல்லது 94990-55944 என்ற தொலைபேசி எண்கள் மூலம் தெரிந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :