திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த தேதி வேலைவாய்ப்பு முகாம்
By: vaithegi Thu, 06 July 2023 12:09:42 PM
திருநெல்வேலி : வேலையில்லா இளைஞர்களுக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற ஜூலை 21 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் ... தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களின் வசதிக்காக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் திருநெல்வேலியில் வருகிற ஜூலை 21 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் சிதம்பரம் நகர், பெருமாள்புரம் பகுதியில் நடைபெற இருக்கிறது.
இம்முகாம் காலை 9 மணி முதல் மதியம் 1 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இந்த முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கிறது. மேலும் தனியார் துறை முகாமில் 10- ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/62307050011 என்ற இணையதளத்தை பார்வையிடலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.