Advertisement

காஞ்சிபுரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Fri, 06 Jan 2023 8:32:37 PM

காஞ்சிபுரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் : நாளை வேலைவாய்ப்பு முகாம் ... காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வேலைவாய்ப்பு முகாம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இளைஞர் திறன் திருவிழா மற்றும் நேரடி வேலைவாய்ப்பு முகாம் ஜனவரி 07 அதாவது நாளை நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இம்முகாமில் 18 வயது முதல் 35 வயது வரை இருக்கும் ஆண், பெண் என இருபாலரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் தேர்வு செய்யப்படுபவர்ககளுக்கு தீன் தயாள் உபத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் அழகுகலை, அலங்கார ஆடை வடிவமைப்பு

employment camp,kanchipuram,district collector ,வேலைவாய்ப்பு முகாம்,காஞ்சிபுரம் ,மாவட்ட ஆட்சியர்

மேலும் உதவி நர்ஸ், டிரைவிங், சில்லறை வணிகம், கணினி, துரித உணவு தயாரித்தல், மென்பொருள் உருவாக்குதல், மொபைல் போன் பழுது நீக்குதல் உள்ளிட்ட பயிற்சிகள் தனியார் நிறுவனங்கள் மூலமாக இலவசமாக வழங்கப்படும்.

எனவே இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகமானது நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் எனவே இந்த அரிய வாய்ப்பை வேலையில்லா இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என ஆட்சியர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags :