ஈரோடு மாவட்டத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
By: vaithegi Thu, 05 Oct 2023 6:24:28 PM
ஈரோடு : தமிழகத்தில் படித்தும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவும் வகையில் மாவட்டம் தோறும் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொண்டு வருகிறது.
எனவே இதன் வாயிலாக இன்றைக்கு பலரும் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெற்று பயனடைந்துள்ளனர். அண்மையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்டம் வாரியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது
இதையடுத்து அதன் தொடர்ச்சியாக நாளை (அக்.06) ஈரோடு மாவட்டத்தில் பயிற்சியாளர் பயிற்சி வாரியம் (Board of Apprenticeship Training) சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் பங்கேற்கலாம். BSC., B.E., B.Tech., கல்வி தகுதியுடையவர்கள் பங்கேற்கலாம்.
இதனை அடுத்து இந்த முகாமில் 100 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர் இதன் வாயிலாக ஆயிரத்திற்கும் மேலான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது..