இந்த மாவட்டத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
By: vaithegi Thu, 15 Dec 2022 6:59:38 PM
அரியலூர் : வேலைவாய்ப்பு முகாம் ... கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. இதனால் மாநிலத்தில் அதிக அளவிலானவர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வந்தனர்.
இதனால் மாநில இளைஞர்கள் நலன் கருதி மாவட்ட வாரியாக உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் ஒவ்வொரு மாதமும் 2-வது வாரம் அரசு சார்பாக அரசுத்துறை வேலைவாய்ப்புகளும், 3வது வாரம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொண்டு வருகிறது.
அதன்படி நாளை அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் தனியார் துறை வேலைவாய்ப்பு காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.
இதனை அடுத்து 18 வயது முதல் 35 வரையிலான பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ படிப்பை முடித்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். இதற்க்கு https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையத்தில் நிறுவனங்களும், இளைஞர்களும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும், இதன் மூலம் பணி வாய்ப்பை பெறுபவர்களின் அரசு வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.