Advertisement

விழுப்புரதில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Sat, 19 Nov 2022 2:49:51 PM

விழுப்புரதில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம்: வேலைவாய்ப்பு முகாம் .... தமிழகத்தில் தனியார் துறைகள் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிய வகையில் உள்ளது. தற்போது மிகப்பெரிய முன்னணி நிறுவனங்கள் மாவட்டம் தோறும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி அதன் மூலம் தங்கள் நிறுவனத்திற்கு ஆட்களை தேர்வு செய்து வருகின்றது.

எனவே இதன் மூலம் கல்லூரி படிப்பை முடித்து வெளியேறியவர்கள், பல நாட்களாக வேலை தேடி வருபவர்கள் நல்ல ஒரு வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.அண்மையில் பிரபல நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் நோக்கில் குறிப்பாக பெண்களுக்கு வேலை வழங்க பல மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாமை நடத்தி கொண்டு வருகிறது.

employment camp,villupuram ,வேலைவாய்ப்பு முகாம்,விழுப்புரம்

இதனை அடுத்து அதன் தொடர்ச்சியாக தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் வாகன தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாமானது நாளை விழுப்புரம் மாவட்டம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. காலை 9 மணிக்கு முகாமானது தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பி.இ பட்டம் பெற்றவர்கள் முதல் டிப்ளமோ, ஐ.டி.ஐ., மற்றும் டிகிரி பட்டம் பெற்றவர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம் என்று இ.எஸ் கல்விக் குழுமத் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.


Tags :