Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை (செப்.17) திருப்பத்தூர் வாணியம்பாடி நகராட்சியில் வேலைவாய்ப்பு முகாம்

நாளை (செப்.17) திருப்பத்தூர் வாணியம்பாடி நகராட்சியில் வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Fri, 16 Sept 2022 4:13:06 PM

நாளை (செப்.17) திருப்பத்தூர் வாணியம்பாடி நகராட்சியில் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூர் : அரசுத்துறையை தொடர்ந்து தனியார் துறையும் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க முன் வந்தது. இதனை அடுத்து அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் அல்லது ஒரு மாதத்தின் 2 வது மற்றும் 4வது வாரத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த வகையில் செப்டம்பர் 17 (சனிக்கிழமை) திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

employment camp,tirupathur ,வேலைவாய்ப்பு முகாம்,திருப்பத்தூர்

இம்முகாமானது வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் பட்டய படிப்பு மற்றும் பட்டப்படிப்பு கல்வி தகுதி பெற்ற அனைவரும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் கலந்து கொள்ளவுள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்களின் நகல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல்களை கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :