Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தோ-நேபாள எல்லை பகுதியில் அத்துமீறல் விவகாரம்; பேச்சுவார்த்தை நடக்கும் என்று தகவல்

இந்தோ-நேபாள எல்லை பகுதியில் அத்துமீறல் விவகாரம்; பேச்சுவார்த்தை நடக்கும் என்று தகவல்

By: Nagaraj Wed, 29 July 2020 8:59:17 PM

இந்தோ-நேபாள எல்லை பகுதியில் அத்துமீறல் விவகாரம்; பேச்சுவார்த்தை நடக்கும் என்று தகவல்

பேச்சுவார்த்தை...உத்தரகண்ட் மாநிலத்தின் தனக்பூரில் இந்தோ-நேபாள எல்லைக்கு அருகே இரு நாடுகளுக்கும் பொதுவான பகுதியில் நேபாள குடிமக்கள் அத்துமீறல் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பாவத் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வர் சிங் கூறியிருப்பதாவது:

நேபாளத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே நிலைமை குறித்து அறிந்திருந்தனர். மேலும் அவர்கள் தூண் எண் 811 அருகே, கேள்விக்குரிய இடம் குறித்து ஆய்வு செய்தனர். “தூண் எண் 811’இல் நிலைமை குறித்து நாங்கள் நேபாளத்தின் காஞ்சன்பூர் மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். நாங்கள் எங்கள் கவலைகளை எழுப்பினோம், அவர்கள் தூண் எண் 811’ஐச் சுற்றியுள்ள பகுதியை ஆய்வு செய்தனர்.

uttarakhand,state officials,border conflict,nepal,negotiations ,உத்தரகண்ட், மாநில அதிகாரிகள், எல்லை மோதல், நேபாளம், பேச்சுவார்த்தை

இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த மாவட்ட அதிகாரிகளுக்கு இடையே இது தொடர்பாக பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் மற்றும் அனைத்து கவலைகளும் அவர்களுடன் பகிரப்படும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வார தொடக்கத்தில், தனக்பூர் அருகே எல்லைப் பகுதியில் உள்ள பொதுவான பகுதியில் மரங்களை நடும் பணிகள் நிறுத்தப்படும் என்று நேபாள அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர். “தனக்பூர் எல்லைப் பகுதியில் நேபாள குடிமக்களால் ஒரு தோட்ட வேலை தொடங்கப்பட்டது. உள்ளூர் அதிகாரிகள் இந்த செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தியா-நேபாள எல்லைப் பகுதியில் தோட்டக்கலை பணிகள் நிறுத்தப்படும் என்று காத்மாண்டு அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுக்கு உறுதியளித்ததாக சம்பாவத் எஸ்.பி. மேலும் கூறினார்.

முன்னதாக, பீகாரின் கிஷன்கஞ்சில் இந்தியா-நேபாள எல்லைக்கு அருகே மூன்று இந்தியர்கள் மீது நேபாள போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு இந்தியர் காயமடைந்தார். பீகார் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தெர்ஹாகச் தொகுதியின் ஃபதேபூரில் உள்ள எல்லைப் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Tags :
|