Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேச விரோதிகள் எங்களுடன் இருந்தால் கைது செய்யலாம்; விவசாயிகள் அறிவிப்பு

தேச விரோதிகள் எங்களுடன் இருந்தால் கைது செய்யலாம்; விவசாயிகள் அறிவிப்பு

By: Nagaraj Sun, 13 Dec 2020 7:24:26 PM

தேச விரோதிகள் எங்களுடன் இருந்தால் கைது செய்யலாம்; விவசாயிகள் அறிவிப்பு

எங்களுடன் தேசவிரோதிகள் யாரும் இருந்தால் அவர்களை அரசு கைது செய்து சிறையில் அடைக்கலாம். இவ்வாறு விவசாயிகள் போராட்டக்குழுவின் தேசிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த போராட்டத்தில், தேச விரோத குற்றச்சாட்டில் சிறையில் உள்ள, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ஷர்ஜில் இமாம், முன்னாள் மாணவர் உமர் காலீத், சமூக செயற்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், அருண் பெரைரா உள்ளிட்டோரின் புகைப்படங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பப்பட்டன.

politicians,investigation,department,confidential documents ,விவசாயிகள் போராட்டம், தேச விரோதிகள், கைது செய்யலாம், சிறை

இவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் விவசாயிகள் போராட்டத்தை தேசவிரோத சக்திகளும், இடதுசாரிகளும் கைப்பற்றி விட்டதாக, மத்திய அமைச்சர்கள் சிலர் புகார் கூறினர். இதுகுறித்து விவசாயிகள் போராட்டக் குழுவின் தேசிய செய்தித் தொடர்பாளரும் பாரதிய கிஸான் யூனியன் தலைவருமான ராகேஷ் திகாய்த் கூறியதாவது:

மத்திய அமைச்சர்களின் புகார் தவறானது. தேச விரோத சக்திகள் எவரும் எங்களுடன் இல்லை. அவ்வாறு இருந்தால், மத்திய உளவுத் துறையிடம் அறிக்கை பெற்று அவர்களை அரசு கைது செய்து சிறையில் அடைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :