Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சோனியா காந்தி மீண்டும் 25ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை உத்தரவு

சோனியா காந்தி மீண்டும் 25ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை உத்தரவு

By: vaithegi Thu, 21 July 2022 4:45:29 PM

சோனியா காந்தி மீண்டும் 25ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை உத்தரவு

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த 8-ந்தேதி மற்றும் 23-ந்தேதி ஆஜராகும்படி சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அச்சமயத்தில் சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதை அடுத்து சோனியா கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டதையடுத்து இன்று (ஜூலை21) விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள்.

enforcement directorate,sonia gandhi ,அமலாக்கத்துறை ,சோனியா காந்தி

அதனால் அதன்படி இன்று மதியம் சோனியாகாந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவருடன் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் உடன் சென்றனர். அவரிடம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வாங்கியதில் நடந்த பண பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் பல கேள்விகளை கேட்டனர்.
அதற்கு சோனியாகாந்தி பதில் அளித்தார்.

மேலும் இன்றைய விசாரணை நிறைவடைந்ததையடுத்து சோனியா காந்தி புறப்பட்டுச் சென்றார். சோனியா காந்தியிடம் இன்று 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் 25ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags :