Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகர் மகளை கைது செய்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள்

திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகர் மகளை கைது செய்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள்

By: Nagaraj Thu, 27 Apr 2023 1:23:37 PM

திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகர் மகளை கைது செய்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள்

மேற்குவங்கம்: அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை... திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் அனுபிரதா மோண்டலின் மகள் சுகன்யாவை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

ஏற்கனவே அனுபிரதா மோண்டல் கால்நடை கடத்தல் தொடர்பான வழக்கில் சிபிஐ மற்றும்அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் அவர் மகள் சுகன்யாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு நிறுவனங்களுக்கு இயக்குனரான சுகன்யா, பிர்பும் மாவட்டத்தில் போல்புர் என்ற ஊரில் அரிசி ஆலையும் நடத்தி வருகிறார்.

சில போலியான கணக்குகள் மூலம் இந்நிறுவனத்தில் சுகன்யா பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்

Tags :
|