Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக இந்திய கம்யூ., நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக இந்திய கம்யூ., நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

By: Nagaraj Thu, 09 Nov 2023 6:35:36 PM

கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக இந்திய கம்யூ., நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

கேரளா: அமலாக்கத்துறை சோதனை... கேரளாவில் கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியின் வீடு உட்பட ஏழு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

கூட்டுறவு வங்கியில் 101 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றது தணிக்கையில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியும் மோசடி நடைபெற்ற கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவருமான பாசுரங்கனின் 2 வீடுகள் சோதனை நடந்தது.

basurangan,hospital,clearance,enforcement,security force ,பாசுரங்கன், மருத்துவமனை, அனுமதி, அமலாக்கத்துறை, பாதுகாப்பு படை

மேலும் அவரது மகன் நடத்தி வரும் ஹோட்டல், அவர் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் துணையோடு சோதனை நடைபெற்றது.

சோதனையின் போது பாசுரங்கன் நெஞ்சு வலிப்பதாக கூறியதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அமலாக்கத்துறையினர் அனுமதித்தனர்.

Tags :