ஷெல் நிறுவன தலைமை அதிகாரியை தாக்க முயன்ற சூழலியல் ஆர்வலர்களால் பரபரப்பு
By: Nagaraj Wed, 24 May 2023 11:29:29 AM
லண்டன்: லண்டனில், ஷெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியை அடிக்க பாய்ந்த சூழலியல் ஆர்வலர்களை பாதுகாவலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எரிசக்தி நிறுவனங்களின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தின்போது திடீரென உள்நுழைந்த சூழலியல் ஆர்வலர்கள் மேடையேறி ஷெல் நிறுவனத்தின் சி.இ.ஓ-வான வேல் சாவன் மற்றும் நிர்வாக இயக்குநர்களை தாக்க முயன்றனர்.
நிலைமையை உணர்ந்த பாதுகாவலர்கள் மனிதசங்கிலி போல் செயல்பட்டு போராட்டக்காரர்களை தடுத்ததுடன் அவர்களை குண்டுகட்டாக வெளியேற்றினர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாவலர்கள் அவர்களை வெளியேற்றி சகஜ நிலைக்கு கொண்டு வந்தனர்.
Tags :
evacuees |