Advertisement

ஈரோடு இடைத்தேர்தல்: நாளை வரை டாஸ்மாக் கடைகள் மூடல்

By: Nagaraj Sun, 26 Feb 2023 1:58:20 PM

ஈரோடு இடைத்தேர்தல்: நாளை வரை டாஸ்மாக் கடைகள் மூடல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் வரும் 27ம் தேதி நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார்.

இதையடுத்து இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 100-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

vacation,tasmac. by-election,district collector ,,விடுமுறை,டாஸ்மாக், இடைத் தேர்தல், மாவட்ட ஆட்சியர்

எனவே அதன்படி நாளை திங்கட்கிழமை வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் இயங்கும் மதுக்கடைகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மார்ச் 2-ம் தேதி மட்டும் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags :